தமிழக அரசு போக்குவரத்து துறை மாநிலத்தில் உள்ள பெருநகரங்களில் மொத்தம் 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளது. இதன் முதல் பகுதியாக சென்னைக்கு 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது என கோவை வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

இந்த டெண்டர் பணிகள் முடிவடைந்து 100 பேருந்துகள் சென்னைக்கு வழங்கப்பட்ட பின்னர், அதற்கு அடுத்து உள்ள 400 பேருந்துகள் கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அடுத்தகட்டமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனவே சென்னைக்கு முதலில் கிடைத்த பின்னரே கோவையில் மின்சார பேருந்துகள் அரசு சார்பில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரியவருகிறது.