கோவையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 35.35 அடியாக உள்ளது. சிறுவாணி அணை அடிவார பகுதியில் 95 மில்லி மீட்டர் மழையும், அனைகட்டு பகுதியில் 135 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளன.