கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிறுவாணி அடிவாரத்தில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.