எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் போத்தனூர் வழியே இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 31.7.24 முதல் 25.8.2024 வரை எர்ணாகுளத்தில் இருந்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிறுகளிலும், வரும் 1.8.24 முதல் 26.8.2024 வரை வியாழன், சனி மற்றும் திங்கள்களில் பெங்களூர் கன்டோன்மென்டில் இருந்தும் இந்த ரயில் சேவை புறப்படும்.

எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் போது இந்த ரயில் மாலை 4.13 மணிக்கும், பெங்களூருவில் இருந்து புறப்படும் போது இந்த ரயில் காலை 11.15 மணிக்கும் போத்தனூர் ரயில் நிலையம் வரும்.