திருப்பதி சென்றால் திருப்பம் வரும், திருமலைக்கு மலை ஏறி செல்வோருக்கு வாழ்வில் ஏற்றம் வரும் என்பார்கள். அப்படிப்பட்ட சிறப்பு கொண்ட திருத்தலமாக உள்ளது திருப்பதி. நாள் ஒன்றுக்கு எத்தனையோ இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். 

 

தீபாவளி நாட்களில் தொடர் விடுமுறை உள்ளதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. 

 

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் போலி வெப்சைட்டை மர்ம கும்பல் ஒன்று தயார் செய்து, பக்தர்கள் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி மோசடி செய்து வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

 

எனவே இதுகுறித்து பக்தர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.