கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள் சென்றார். 

அப்போது அப்பகுதியில் இருந்த 4 தெருநாய்கள் குழந்தையை நோக்கி ஓடி வந்துள்ளது. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிகளில் சிறுவனை சுற்றிவளைத்தது. 

தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன்  கூச்சலிடவே, கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்த அவனின் தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்டுள்ளார். 

இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.