கோவை மாநகரில் மிதமான மழை பொழிவு கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. நேற்று பெய்த மழையின் காரணமாக வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் பெருமளவு தேங்கியுள்ளது. சுரங்கப்பாதை வழியே வரும் வாகன ஓட்டிகள் இதனால் சிரமம் அடைகின்றனர்.