கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய, “வாகைசூடவா” என்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் கடந்த செவ்வாய் நடைபெற்றது.  

கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் பெறுநிறுவனத் தொடர்பு மைய இயக்குநர் தாமரை செல்வன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில்:-

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலம் மிகச்சரியானது. சரியாகத் திட்டமிட்டு, அதை நோக்கி நகரக்கூடிய தருணம் இது.

எதிர்காலத்திற்கான முன்னோட்டத்தை இப்போதே தொடங்கி விடவேண்டும். நீங்கள் யாராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். அதை நோக்கிய திட்டமிடலுக்கு உங்கள் மனம் தயாராகிவிடும். பொதுவான நடைமுறைகள் என்னவென்பதை அறிந்துக் கொள்ளவேண்டும், என கூறினார்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் பொறுத்தவரை, தொடர்கற்றல் மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தரும். முதல்முறை அல்லது பலமுறை முயற்சி செய்து வெற்றி பெற்றவர்கள் உள்ளனர். தேர்ச்சி பெறபோதிய மதிப்பெண்பெறுவது, காலதாமத்தைக் குறைப்பதற்கு முறையான வழிகாட்டுதல்கள் அவசியம். மற்றவர்கள் அளிக்கும் ஊக்கத்தை விட, சுயஊக்கமே சக்திவாய்ந்தது. நிலையான தொடர் முயற்சி மிகவும் அவசியம். வழிகாட்டுதல்களுடன் கூடிய தொடர்முயற்சியே வெற்றியை பெற்றுத்தரும் என்றார்.

அதைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு, பதிலளித்தார். பின்னர் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் எம்.பூமிநாதன், சிவில் சர்வீஸ் தேர்வுமுறைகள் குறித்துப்பேசினார்.