வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் கோவை மாநகர போலீசார் ரயில்வே போலீசார் வட மாநிலத்திலிருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணித்த பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன.
இதில் சுமார் 10 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தை தொடர்ந்து நான்கு வடமாநிலத்தவர்களை பிடித்து வைத்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் மூலம் கோவைக்கு குட்கா கடத்திவந்த கும்பல் போலீசாரிடம் சிக்கியது!
- by CC Web Desk
- Jun 29,2024