கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் நாளை (24ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

குனியமுத்துார் துணை மின் நிலையம்: குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.

அண்ணா பல்கலை துணை மின் நிலையம்: கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.,காலனி, அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம்பாளையம்.

மயிலம்பட்டி துணை மின் நிலையம்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா ஒருபகுதி மற்றும் கோல்டுவின்ஸ் ஒருபகுதி