மூன்றாம் முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வரும் வியாழன் (20.6.2024) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயங்க உள்ள வந்தே பாரத் ரெயில் சேவையை அவர் துவக்கி வைக்க உள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.