கோடநாடு வழக்கு : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாவலர் சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜர்
- by David
- Mar 13,2025
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 அன்று கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
முன்னாள் ஓட்டுநர் சி. கனகராஜ் தலைமையிலான கும்பல் ஒன்று எஸ்டேட்டில் கோடிக் கணக்கில் பணம் இருப்பதாக நம்பி ஆயுதங்களுடன் வந்து, எஸ்டேட் பாதுகாவலர் ஓம் பகதூரை கொன்று, பொருட்களை கொள்ளை அடித்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சாலை விபத்திலும், மற்றொரு குற்றவாளியான சயான் கார் விபத்திலும் உயிரிழந்தனர். எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த தொடர் மரணங்கள் வழக்கில் மர்மம் அதிகரித்தது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். இதுவரை 250 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
கடந்த 11ம் தேதி ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று மற்றொரு பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமியும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.