கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் இன்று சந்தித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனது வாக்கு சதவீதத்தை 2019 நடந்த தேர்தலை விட 1% அதிகரித்திருக்கிறது. அதேசமயம் திமுகவிற்க்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் இம்முறை குறைந்துள்ளது. இந்நிலையில் ஊடகங்கள் அதிமுகவிற்க்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்றார்.

தி.மு.க.வில் ஸ்டாலின் ,உதயநிதி மற்றும் அமைச்சர்கள் என அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் வாக்கு சேகரித்தார்கள். மேலும் ராகுல் காந்தி ,திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் பிரச்சாரம் செய்தார்கள்.பா.ஜ.காவை பொறுத்தவரை பலமுறை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.

மேலும் அந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் பிரச்சாரம் செய்தனர். இதற்கு மத்தியில் தான் அதிமுகவின் 1 சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. இது சட்டமன்ற தேர்தல் அல்ல, மத்தியில் யார் வர வேண்டும் என்கிற தேர்தல். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும். என்றார்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களால் தான் ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. பிரிந்து சென்றவர்களால் அதிமுகவிற்க்கு எந்த இழப்பும் கிடையாது என்றார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.