ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த சசி மோகன் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்ஸில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

அதற்கடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசுகையில் கோவை சரகத்தில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற தடுப்பு நடவடிக்கை மேலும் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கோவை நகரையொட்டிய புறநகர் எல்லைகளில் போதை பொருளை தடுக்க ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விழிப்புணர்வு நடத்தி போதை பொருளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கோவை மாநகர காவல் ஆணையாளராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு

கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன்  ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் ஐ.ஜி யாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார்.