சிறுவாணி அணையின் நீர்மட்டம் 14.53 அடியில் இருந்து 18.89 அடியாக உயர்ந்து உள்ளது.

செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 11 அடியாக இருந்த நிலையில், நேற்று (புதன்) பெய்த மழையில் 3 அடி ஊர்ந்து 14 அடியாக நீர்மட்டம் இருந்தது.

இந்நிலையில், தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் அணையின் இன்றைய நீர்மட்டம் 18.89 அடியாக உள்ளது.

அதேபோல பில்லூர் அணை பகுதியிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இன்று காலை 5 மணிக்கு பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. வினாடிக்கு 14000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.