கோவையில் எல்.பி.ஜி லாரி கவிழ்ந்து கேஸ் வெளியான நிலையில், அது தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காலை 3.15 மணியளவில் கொச்சியில் இருந்து வந்த LPG கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. திருச்சி ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக பம்பு மூலம் கேஸ் அகற்றுவதற்கான பணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். NDRF குழுவினரும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டு மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேறு பம்பை வைத்து இரண்டு மூன்று டேங்கில் நிரப்ப முயற்சிக்கிறோம். 18 டன் எல்.பி.ஜி கேஸ் இந்த டேங்கர் லாரியில் உள்ளது. தற்காலிகமாக வாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள டPG குடோனுக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை கேஸ் லாரி விபத்து சம்பவம் : தற்காலிகமாக வாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளது - போலீஸ் கமிஷ்னர் தகவல்
- by CC Web Desk
- Jan 03,2025