கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் செல்லும் பக்தர்கள், நான்கு சக்கர வாகனங்களில் மலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது:-

மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின்படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இத்திருக்கோவிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் இனி வரும் காலங்களில் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.

மேற்படி நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.