கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்துபவரா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
- by CC Web Desk
- Jan 17,2025
Coimbatore
2024-2025ம் ஆண்டு நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்களில் வரிவசூல் பணி வரும் சனிக்கிழமை (18.01.2025) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்:-