கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண் -25ன் பிரதான பகுதியான காந்திமாநகர் சந்திப்பில் உள்ள High-Mast உயர தெரு விளக்கு கடந்த 2 வாரமாக செயல்படாமல் இருப்பதாலும், அதை மாற்ற 2 வாரமாக இப்போது வரை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளதாலும் மாலை நேரங்களில் FCI சாலை, சரவணம்பட்டி, பீளமேடு போன்ற பகுதிகளிலிருந்து அவ்வழியே வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றன. 

சரவணம்பட்டி மற்றும் FCI சாலை வழியாக வருபவர்கள் காந்தி மாநகர் பிரதான சாலை வழியே கொடிசியா செல்வது எளிது என்பதால் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். மாலை நேரத்தில் இங்கு போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த வழியே பேக்கரி, துரித உணவு கடைகள் அதிகம். இங்கு ஒரு பேருந்து நிறுத்தமும் உள்ளது.

இரவு 11 மணி வரை இங்கு போக்குவரத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் முறையாக High-Mast உயர தெரு விளக்கை மாற்றாமல் உள்ளதால், 2 வாரமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். ஏற்கனவே இங்கு தெரு நாய்கள் தொல்லை மிக அதிகம் உள்ளது. கூடுதலாக வளர்ப்பு மாடுகள் சாலையில் தாராளமாக அவிழ்த்து விடப்படுவது, வாகனஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை கூடுகிறது.

இத்துடன் இங்கு உள்ள தெருக்களில் அடிக்கடி தெருவிளக்கு எரிவதில்லை. இதுவும் கண்டும் காணாத ஒரு பொது பிரச்சனையாக உள்ளது.