தென் மேற்கு பருவக்காற்று மற்றும் மழைக்காலம் துவங்கியதில் இருந்து, கோவையில் சில நாட்களாக சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

 

இன்று கோவைப்புதூர், போத்தனூர், நஞ்சுண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில்

இன்று காலை 7.15 மணிவரை சூரிய ஒளி பெருமளவு தெரியாத வகையில் பனிமூட்டம் காணப்பட்டது. 

 

இதனால் காலை பள்ளிக்கு, பணிக்கு செல்பவர்கள் சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனங்கள் சென்றனர்.