கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் கோவை மாநகரில் வரும் மார்ச் 22ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலையறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் 250க்கும் மேற்பட்ட பங்கேற்க இருக்கின்றன. இவர்களிடம் உள்ள 15,000+ காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகாமில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்றவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ நர்சிங் பார்மசி பொறியியல் ப படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், அவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் அன்று வருகை தர வேண்டும்.

மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசமாக வழங்கப்படும்.

எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் லிங்கையோ, அல்லது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களது விவரங்களை முன்பதிவு செய்வது அவசியம்.

கூகுள் லிங்க் - https://forms.gle/FrpzDbZW6y9jfg7y5 

இணையதளம் - www.tnprivatejob.tn.gov.in 

தொலைபேசி - 0422-2642388 or 94990-55937.

QR குறியீடு -