கோவையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்த நிலையில், தற்போது 20 நிமிடங்களுக்கு மேல் பேரூர், மாதம்பட்டி, பூலுவப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடிமேகங்கள் தற்போது கோவையின் மேற்கு பகுதிகள் (தொண்டாமுத்தூர் தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகள்) வடமேற்கு பகுதிகள் (துடியலூர் சுற்றுவட்டார பகுதிகள்) சூழ்ந்து உள்ளது என்பதால் அடுத்த சில மணிநேரங்களில் இங்கெல்லாம் மழை சற்று நேரத்தில் பெய்யும் எனவும், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கோவை வானிலையை ஆய்வு செய்யும் இளம் வானிலை ஆய்வாளர் சுஜய் தெரிவித்துள்ளார்.