கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான மனுவை, இன்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மத்திய இணை அமைச்சர் L. முருகன் இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.