கோவை ரயில் நிலையம் அருகே பேருந்துகள் சாலை ஓரமாக நிறுத்தப்படுவது வழக்கம். ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி பேருந்து நிறுத்துவதால் ரயில் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிப்படைகின்றனர்.

இன்று அங்கு நோ பார்க்கிங் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று (தடம் எண்:-11 ரயில் நிலையம் முதல் கணுவாய் வரை செல்லும்.தனியார் பேருந்து) நிறுத்தப்பட்டிருந்தது. விதியை மீறி அங்கு அவ்வாறு அந்த பேருந்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து போலீசார் வாகனத்தை முடக்கி ஓட்டுநருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.