கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல மணி மேல்நிலைப்பள்ளியில் 1984 ஆம் ஆண்டு SSLC படித்து முடித்த முன்னாள் மாணவ, மாணவிகள் இன்று மீண்டும் பள்ளிக்கு திரும்பி தங்கள் பள்ளி கால நினைவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மீண்டும் பள்ளிக்கு வந்த தருணம் மிகவும் சிறப்பான ஒன்று என அவர்கள் கூறினர். 50க்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் இன்று கூடி, தாங்கள் பள்ளி நாட்களில் செய்த ரசிக்கும் படியான செயல்களை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

"நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக மீண்டும் இணைந்து இருந்தோம். இப்போது மீண்டும் பள்ளிக்கு வந்து, ஒருவரை ஒருவர் சந்தித்து, எங்கள் வகுப்பறையில் அமர்ந்து பழைய நிகழ்வுகளை எண்ணிபார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார் ஒரு முன்னாள் மாணவர்.

"நாங்கள் பள்ளியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் மதியம் கூடி, உணவு அருந்திவிட்டு, எங்கள் ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களுக்கு மரியாதை செய்து இந்த நாளை இனிதே நிறைவு செய்ய இருக்கிறோம்," என்று தெரிவித்தனர்.

Photos: David Karunakaran.S