தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்- கோவையின் கீழ் செயல்படும் அரசு பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.20,000 யை நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பயணியிடம் ஒப்படைத்த சம்பவம் பலரின் வாழ்த்துக்களை பெற்றுள்ளது. 

TN38N3524, 20A, சோமனூர் to காந்திபுரம் வழித்தடப் பேருந்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஓட்டுனர்  K.விஜயகுமார், நடத்துர் V.A.முருகன பணியாற்றியுள்ளனர். 

இந்த பேருந்தில், பயணித்த பெண் பயணி ஒருவர் தனது உடமையை தவறவிட்டு விட்டு சென்றுள்ளார்.அதை நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் சேர்ந்து, அந்த பெண் பயணியிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதில் இருந்த 20,000 ரூபாய் பணம் மற்றும் பயணி வைத்திருந்த அனைத்தும் உள்ளதாக கூறி பெண்பயணி பெரும் மகிழ்ச்சி அடைந்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செயலுக்கு நன்றி  தெரிவித்தார்

பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், கழக ஊழியர்களுக்கும்.. பெருமை சேர்க்கும்படி நடந்து கொண்ட இரு ஊழியர்களை மேலான் இயக்குனர் ஜோசப் டயஸ் அழைத்து பாராட்டியுள்ளார்.