கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் மாணவியர் தங்கும் விடுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்)  இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விடுதியில், 162 மாணவிகள் தங்கி, கல்லூரிகளில் பயின்று வரும் நிலையில், அவர்களிடம் கலெக்டர் பவன்குமார் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நுணுக்கங்களையும் கூறினார்.

தொடர்ந்து ஆட்சியரிடம் மாணவிகள், மதிய உணவில் கீரை வேண்டும் எனவும் 15 மாணவிகளுக்கு தலா 1 கணினி வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும், விடுதியில், விளையாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதனைக் கேட்ட கலெக்டர், மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.