சென்னை, நீலாங்கரையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை   முன்னிட்டு நடைபெற்ற சாகச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிறுவனுக்கு விபரீத சம்பவம் நிகழ்ந்தது அங்கிருந்த அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலாங்கரையில் த.வெ.க மாவட்ட த் தலைவர் சரவணன் தலைமையில், நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில்  பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, ஓடுகளை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிறுவனின் கையில் தீயை பற்றவைத்த போது, அதை முதலில் தாங்கிக்கொண்டு ஓடை அவன் உடைத்தான். ஆனால் அதற்கு பின்னரும் அவன் கையில் தீ தொடர்ந்து பற்றிக்கொண்டு இருந்ததால் அவன் அலறித்துடிக்க, அங்கு இருந்துவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். அதுவும் முதலில் விபரீதமாக மாறியதால், தீ வேகமாக பரவியது. அதன் பின்னர் தான் அது அணைக்கப்பட்டது.