கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல்வேறு தரப்பிற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் நேற்றிரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

 

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் BDDS பிரிவினர் அதிகாலை வரை கோவை விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இன்று அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

 

இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இது போன்ற மிரட்டல்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Info : Nandhakumar