கோவை ரயில் நிலையத்தில் ரூ.5க்கு 1 லிட்டர் குடிநீர் வழங்கும் எந்திரம் அறிமுகம்
- by CC Web Desk
- Jan 28,2025
Coimbatore
கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க இன்று அங்கு தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் குடிநீர் வரும்.
குடிநீர் முறையே 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர், ரூ .1, ரூ .3, ரூ .5, ரூ .8 மற்றும் ரூ .20 ஆகியவற்றில் கிடைக்கிறது. பயணிகள் தங்கள் சொந்த பாட்டில்களில் தண்ணீரை நிரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நாணயம் மட்டும்மல்ல அனைத்து டிஜிட்டல் கட்டண செயல்முறை மூலம் பணம் செலுத்த முடியும். இந்த எந்திரம் மூலம் 24 மணி நேரமும் பொது மக்கள் குளிர் குடிநீரைப் பெறலாம்.
இதை இன்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் குளோபல் கிரியேட்டர்கள் நிர்வாகத்தினர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.