கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024 வருகின்ற ஜூலை 19 முதல் 28 ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 10 நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றியும், அதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சென்ற ஆண்டு 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த புத்தக திருவிழாவில் பங்கேற்றனர். இம்முறை நடைபெறும் நிகழ்வில் அதை மிஞ்சும் அளவு மக்கள் வரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.