தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில்  பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில், ஃபைட்டர்ஸ் அகாடமி மற்றும் ஹையாசிகா கராத்தே அமைப்பு இணைந்து நடத்திய  சிலம்பம் மற்றும் கராத்தே சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சியில்,  4வயது சிறுவர்கள் முதல் 50 வயது நபர்கள் வரை என சுமார் 1,500 பேர் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.. 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய உடை அணிந்து 1,500 பேர் சிலம்பம் சுற்றியது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மேலும் இந்த உலக சாதனை போட்டிக்காக தமிழ்நாட்டில் இருந்து  சென்னை, கோவை, கன்னியாகுமரி, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான  கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த சிலம்பக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.